Monday, December 6, 2010

சாலையோரம்...

வெளியில் அடை மழை
என்னுள் வெப்பம் ‍_ சூரியனாய் நீ...

மழை நனைத்த சாலையில்
உனை அணைத்து நடக்கையில்
ஈரம் குளித்த சாலையோரப் பூக்கள்
தலை சாய்த்து கேட்கிறது
உன் குளிர் வெப்பம் தானும் பெற..

நீர்த்துளி இலைகளின் தலை
துவட்டிக் கிளம்பிய தென்றல்
மூச்சு முட்டி நிற்கிறது
நம் இருவருக்கும் நடுவே
நுழைந்து செல்ல முடியாமல்...

உனை நோக்கும் நொடிப் பொழுதில்
பட படக்கும் என் இமைகள் கண்டு
'கூட்டத்தில் தவறிய குஞ்சுகளென‌
கூட்டிப் போக வருகிறது தாய்க் குருவி...

உதிரும் மழைச் சரங்கள்
உன் முத்தத்தால் மூழ்கிய‌
என் கன்ன‌க் குழிகளை
நிரப்ப முடியாமல்
உருண்டோடி மண் சேர்கிறது...

இத்தனையும் ரசித்துக் கொண்டே
நீ இறுக்கிய இறுமாப்பில்
தொடர்ந்து செல்கிறேன்
என் கனவுச் சாலைகளில்....

No comments: