Sunday, December 12, 2010

உற‌வின் மீட்சியாய்....












அனிச்சையாக உள் நுழைந்து
அதிர்வுகளை ஏற்படுத்தும்
வார்த்தகைகள் மறைத்த உன்
மயக்கும் மௌனங்கள்...

உனக்கு என் மீதும் எனக்கு உன் மீதும்
இருந்ததும் இருப்பதும்
காதலா?!.. காமமா?!.. போதயா?!...

காமமும் போதையும் மீளக்கூடியவை
ஆனால் காதல்?...

உனைப்பற்றிய அநேக எழுத்துக்கள்
இரவில் ஒரு காதலாய் ஒரு தவமாய்
ஒரு யாகமாய் மனதுள்ளேயே
வார்த்தைகளாகி வாக்கியமாகி பின்
விடியலில் காணாமலும் போகிறது
படிக்கப் படாத கவிதையாய்
பிரிக்கப் படாத புத்தகமாய்

மௌனங்கள் பேசிய நம்
உறவின் மீட்சியாய் பிறக்கிறது
என் வரிகளின் நீட்சி....

No comments: