Saturday, March 12, 2011

மீண்டும் மீண்டும்...










இதழ்களில் அஹிம்சயை போதித்து
கண்களில் வன்முறை ஏன் செய்தாய்

தூரத்தில் நீ நின்றாலும்
உன் சுவாச வெப்பம் போதியதே
என் மனதில் தீப்பிடிக்க

சற்றே புருவம் சுருக்கிய
உன் குறு குறு பார்வை
போதியதே என் இதயத்தில் குளிரடிக்க

எனைத் திட்டுவதற்கான
உன் கத்தல்களில்
ஒளிந்திருந்த காதல் போதியதே
என் மனதை வருடிச் செல்ல

அனைத்தும் துறந்து
அணை உடைத்த வெள்ளமாய்
நீ பாய்ந்து சென்ற பின்னும்

என் இதயப் பள்ளங்களில்
அங்கங்கு தேங்கி நிற்கிறது
உன் நினைவு நீர்த் தேக்கங்கள்

பாசம் படர்ந்த உன் நினைவுக்கரை
கடக்க முயன்று முயன்று
முடியாமலேயே மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுகின்றேன்

"உன் ஞாபக குளத்துள்ளேயே".....

No comments: