Wednesday, March 16, 2011

மரிக்க மறுத்த.....

மரிக்க மறுத்த ஞாபகங்கள்
மறுத்தும் மறந்து போகாமல்
ஒரு துளிக் கண்ணீரில் நீந்தி
கரை சேர்கிறது மரத்த மனதோரம்....

சிதறி ஓடிய காதல் துளிகளை
சேர்க்க முயல்கிறேன்
உயிரின் கோடிட்ட இடத்தை,
உறவின் விடுபட்ட வெளியை நிரப்ப ....

துடுப்பு தொலைத்த பரிசலாய்
உன் நினைவுச் சுழலிலே
சுழன்று கொண்டேதான் இருக்கிறது
உன் காதல் தடம் பதிந்த
என் காலச் சக்கரம்....

No comments: