
ஏதேதோ பேசிச் செல்கிறாய்...
பர பரக்கும் அலுவல் நேரத்திலும்
அமைதியான நிலவு நேரத்திலும்
உனக்கு எபோதேனும் கிடைக்கும்
தனிமைப் பொழுதுகளிலும்
என்னை எப்போதும் நிறைக்கும்
உன் நினைவுப் பொழுதுகளிலும்
நான் சொல்லில் மறைத்த காதலையும்
நீ சொல்ல மறந்த காதலையும்
கவனமாகத் தவிர்த்துவிட்டு
ஏதேதோ பேசிச் செல்கிறாய்...
No comments:
Post a Comment