Wednesday, September 14, 2011

சிரிப்பற்றவள்.....














உன் வானத்தில் மேகமாய் நான்
என் வானத்தில் நீலமாய் நீ..

நீ தூவிச் சென்ற நட்சத்திரங்கள்
நம் காதல் வானவில்லின்
க்ரீடங்களாய்
நிறமிழந்த என் வானத்தில்
இன்றும்...

அனிச்சையாய் நீ எப்போதும்
என் உறக்கத்திலும் விழிப்பிலும்
கனவாகவும் நினைவாகவும்...

மணல் வெளியில் ஓடிக் களைத்த
குதிரையாய் நான்
உன் மனவெளியில்
அன்பைத் தேடி...

இரக்கமற்ற என் இரவுகளில்
இமை மூட நீ
முட்களைப் பரிசளிக்கிறாய்..

சிரிக்கும் இதழ்கள் இருந்த போதும்
நான் சிரிப்பற்றவள் ஆகின்றேன்..

No comments: