Wednesday, June 19, 2013

இன்று பள்ளி...


கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
முதுகில் புத்தகச் சுமையையும்
இடக்கையில் சாப்பாட்டுப் பையையும்
சுமந்து கொண்டு
கண்களில் கலவரத்துடன்
இரண்டாம் மாடியின் தடுப்பு வழி
வலக்கை அசைத்து டாட்டா காட்டும்
எல்லாக் குழந்தைகளிலும்
என் குழந்தையின் சாயல் கண்டதால்
பள்ளிக் கதவருகே
கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
திரும்பிச் செல்ல மனமின்றி

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எல்லாக் குழந்தைகளிலும்
என் குழந்தையின் சாயல்// என்ற
நல்ல தாயுள்ள சிந்தனையுடன் கூடிய அழகான கவிதை. பாராட்டுக்கள்.

SOS said...

உடனடி பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க மிக்க நன்றி VGK சார் மற்றும் திரு. தனபாலன்.