Monday, February 23, 2015

நானாகிய தோட்டம்....

எனது பெருவெளியில்
தோட்டம் ஒன்று வரைந்தேன்
சில பூக்களையும்
கூடவே சில வண்ணத்துப் பூச்சிகளையும்

வந்து பார்க்கவும்
வாசங்கள் நுகரவும்
சில மனிதர்களையும் வரைந்து வைத்தேன்

விடியலில்
பூக்களின் நிறங்களும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளும்
காணாமல் போயிருந்தன

உதிர்ந்து கிடந்தன சில முகமூடிகள்…

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உதிர்ந்து கிடந்தன சில முகமூடிகள்…

என்று சொல்லி ரசனையற்ற ஜன்மங்களின் முகத்திரையைக் கிழித்து விட்டீர்கள்.

சபாஷ் !