Monday, August 24, 2015

வசந்தகாலம்.... வசம் இழந்த காலம்...

விடியலில் நினைவுக்கு
வந்தே தொலையாத

தொலைந்திடும்
நள்ளிரவின் கனவு போல
மீண்டு வராமலேயே

காட்டுத்தீயில் அகப்பட்ட
காய்ந்த சருகுகளாய்
சட சடவென கருகிவிட்டது
நம் வசந்தகாலம்
நாம் வசம் இழந்த காலம்...

ஒரு வார்த்தையில் தொடங்கி
சில வார்த்தைகளில் தொடர்ந்து
இப்போது வார்த்தைகள்
தொலைத்த ஊமையின் வெறுமையுடன்
வெளியேறிவிட்டாய்...

எப்போதும் வாதங்களுடனும்
வார்த்தைகளுடனும்
போர் புரிந்து கொண்டிருக்கும் 
நீ
ஒருபோதும் 
அறியப் போவதே இல்லை
என் காதலையும்
இக் கவிதையையும்…

No comments: