Sunday, November 15, 2015

தேவதை...

அம்மா நீ தேவதை மா
கழுத்தைக் கட்டிக்கொண்டு
சொல்லிய எட்டு வயது
மகனைப் பார்த்து முறைத்தேன்
ஏண்டா கிண்டலா
உதைக்கிறேன் பாரு உன்ன
என்றேன்
நெஜமாத்தாம்மா நீ தேவதை தான்
தேவதைன்னா
அழகா சிவப்பா நீள முடியோட
பின்னாடி இறக்கையோட இருக்கனும்னு அவசியம்
இல்லையாம்
அன்பா இருக்கற
அடுத்தவங்களுக்கு
உதவி செய்யற
யாரையும் புண்படுத்தாத
யாரும் தேவதைதான்னு எங்க
மிஸ்ஸு சொன்னாங்க
அம்மா நீ எனக்கு தேவதை தாம்மா
சொல்லிய மகனை நோக்கி
இறக்கைகள் நீளத் தொடங்கியது..

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான ஆக்கம்.

//சொல்லிய மகனை நோக்கி இறக்கைகள் நீளத் தொடங்கியது..//

அசத்தலான முடிவு.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

பாராட்டுகளுக்கு நன்றி வை.கோ சார்.