Thursday, February 4, 2016

கொஞ்சம் பிடிக்கும்....

உன் பாதம் பதிந்த
என் வாசல் மண்ணை
ஈரம் காயாமல்
பொத்தி வைத்திருக்கிறேன்
என் வீட்டு அஞ்சறைப் பெட்டி
அடுக்கின் மறைவில்
ஹா!!....
உன் மீது தீரா காதல்
என்றெல்லாம் இல்லை
உன்னைக் கொஞ்சம்
பிடிக்கும் அவ்வளவே…


1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொஞ்சம் பிடிக்கும் என்பதற்காகவே .......

காலடி மண் ஈரம் காயாமல் பொத்தி வைக்கப்பட்டுள்ளதே,
அதுவும் அஞ்சறைபெட்டி அடுக்கின் மறைவில் ..........

ஒருவேளை தீரா காதல் என்றால் ...... :)

பகிர்வுக்கு நன்றிகள்.