Saturday, October 19, 2013

உறங்க வைக்க முடிவதில்லை...

பேசிய வார்த்தைகளை
உதைத்து உருட்டிக்கொண்டே
மௌனத்தால் முற்றுப் புள்ளியாக்கிவிட்டாய்
நம் நினைவுகளை...

விளையாட்டு முடிந்த மைதானத்தில்
திக்கற்று அலையும் வெற்றுக் காகிதமாய்,

அகால வேளையில்
பழுதடைந்த தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட ஒற்றை ரயில் பெட்டியின்
தனிமையோடு அலைகிறது மனது..

எரிமலையின் ஆழத்தில்
நிச்சலனத்தில் உறைந்திருக்கும்
உனக்கான சொற்களை என்னால்
ஒருபோதும் உறங்க வைக்க முடிவதில்லை...

நீ வீசி எறிந்த சொற்களின் மாபெரும்
த்தில் நசுங்கிக் கிடக்கின்றன
நமதான ஒரு ஒற்றைக் கனவும்
அதன் பெருவெடிப்பில்
கருகிச் சிதறிய இக் கடைசிக் கவிதையும்...

Monday, October 14, 2013

பக்கங்களற்ற புத்தகம்...


பக்கங்களற்ற புத்தகம் ஒன்று
சொல்லையும் பிம்பத்தையும் பிரித்து
சொற்களின் மீது மனக் கசப்பை
ஏற்றி விட்டு பிரிந்து கிடக்கிறது..

கடைசி நட்சத்திரம் வரை
நீண்டு கொண்டிருக்கும் இரவில்
என் நிலவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
சென்னிறமாக...

காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும்
பயணியின் நினைவு போல...

Thursday, August 22, 2013

ஆ(கா)தலால்.....

மழை நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை நனைத்த சாலையில் நாம்
கை கோர்த்து நடந்ததில்லை..

மழைத்துளிகளின் இடைவெளியில் நாம்
ஒதுங்கி நனைந்ததில்லை...
சாரல்களில் ஓரத்தில் 
உடல் ஒட்டி நின்றதில்லை..

இருந்தும் மழை வரும் போதெல்லாம்
நீ வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...

Wednesday, June 19, 2013

இன்று பள்ளி...


கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
முதுகில் புத்தகச் சுமையையும்
இடக்கையில் சாப்பாட்டுப் பையையும்
சுமந்து கொண்டு
கண்களில் கலவரத்துடன்
இரண்டாம் மாடியின் தடுப்பு வழி
வலக்கை அசைத்து டாட்டா காட்டும்
எல்லாக் குழந்தைகளிலும்
என் குழந்தையின் சாயல் கண்டதால்
பள்ளிக் கதவருகே
கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
திரும்பிச் செல்ல மனமின்றி

Friday, June 14, 2013

நேசிக்க மட்டும்...


 

உன்னைப் போல
பேசத் தெரியவில்லை
நேசிக்க மட்டும் தான்
தெரிகிறது எனக்கு.

Saturday, June 1, 2013

சிறிய விஷயம்?!?!...

சிறிய விஷயம் தான்!
நம்மை சிறகடிக்க வைக்கிறது
சிறிய விஷயம் தான்!!
நெஞ்சை சிதறடிகவும் செய்கிறது

சிறிய விஷயம் தான்!
அழகான சுவடாய் இதயத்தில் பதிகிறது
சிறிய விஷயம் தான்!!
அழியாத சோகமாய் மனதில் படிகிறது

சிறிய விஷயம் தான்!
புன்னகையை உயிர்ப்பிக்கிறது
சிறிய விஷயம் தான்!!
தீராத ரணத்தை பரிசளிக்கிறது

சிறிய விஷயம் தான்!
சுமைகளை சுகமாக்குகிறது
சிறிய விஷயம் தான்!!
அன்பைக் கீரிப் போகிறது

சிறிய விஷயம் என்பதெல்லாம்
உண்மையில்

சிறிய விஷயமே அல்ல!!!...

நமக்கானதொரு!!..


உனை அழைக்க நேரும்போதெல்லாம்
உனைப்பற்றிய நினைவுகளில்
மூழ்கும் போதெல்லாம்
என் தோட்டத்து குயில்
நமக்கானதொரு பண்னை
இசைக்க ஆரம்பிக்கிறது..