எனது
பெருவெளியில்
தோட்டம்
ஒன்று வரைந்தேன்
சில
பூக்களையும்
கூடவே
சில வண்ணத்துப் பூச்சிகளையும்
வந்து
பார்க்கவும்
வாசங்கள் நுகரவும்
சில
மனிதர்களையும் வரைந்து வைத்தேன்
விடியலில்
பூக்களின்
நிறங்களும்
வண்ணத்துப்
பூச்சியின் சிறகுகளும்
காணாமல்
போயிருந்தன
உதிர்ந்து
கிடந்தன சில முகமூடிகள்…