
கடலில் இருக்கும் மீன்
கடலைத் தேடிக் கொண்டிருப்பதை போல
என்னில் உன்னை வைத்துக் கொண்டே
வெளியே தேடுகின்றேன்....
இரவைப் பகல் தொடரும்
இயல்பு போல
நான் உன்னில் இருந்தபடியே
உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...
ஓடை நீரில் மலரை
பொத்திவைப்பது போலவே
உன் நினைவுகளை மறைத்து
தோற்றுப் போகிறேன்
பூட்டி வைத்திருந்த எனது கூடங்களில்
வாத்தியங்கள் எல்லாம்
எட்டிப் பார்த்து நீ
இழுத்து விடும் சுவாசத்தையே
குறிப்பாகக் கொண்டு
இசைக்கத் தொடங்கி விடுகின்றன..
நீ எப்போதும்
எனது இலக்காய் அல்ல
முடிவாகவே இருக்கிறாய்...
No comments:
Post a Comment