
சுட்டெறிக்கும் சொற்களை
ஒவ்வொரு நொடியும் வீசுகின்றாய்
பூதானோ என மயங்கியே ஏற்கின்றேன்...
புன்னகையை எதிர்பார்த்து
செந்தனலைப் பெறுகின்றேன்
காலங்கள் பல கடந்து
உன் காதலைப் பெற வந்தேன்
தூரங்கள் பல நடந்து
உன் தோள்களில் சாய வந்தேன்
கண்களாலேயே காயம் செய்து
எட்டி என்னை நிற்க வைத்தாய்
மிகத் தேர்ந்த கண்கட்டு வித்தைக்காரன் நீ
நீ தருகின்ற காயங்களை எல்லாம்
கிரீடங்களாக எனை ஏற்கச் செய்தாய்
என் கூட்டை விட்டு வெகு தூரம்
வந்துவிட்டேன்
உனக்குப் பரிசாக என் சிறகு ஒன்றை
கொய்து கொண்டாய்
நீ இல்லாது நடக்க
கால்களும் அற்று
ஒற்றைச் சிறகுடன் ஊனப் பறவையாக
இத்தனை தூரம் நான் எப்படிக் கடப்பேன்?....
No comments:
Post a Comment