Tuesday, June 5, 2012

உனதழைப்பு...

















மிக நீண்டதொரு
இடைவேளைக்குப் பிறகு
அலைபேசியில் உன் அழைப்பைப் பார்த்து
முகம் இறுகியது மனம் இளகியது
மூளை கரைந்தது கண் அழுதது
உதடு துடித்தது நாக்கு தழு தழுத்தது
மூக்கு விடைத்தது விரல்கள் பரபரத்தன
இத்தனையும் சமாளித்து
என் செவியில் நுழைந்த
உன் குரல் மனதை எட்டுவதற்குள்
இணைப்பு மீண்டும்
துண்டிக்கப்பட்டுவிட்டது...

No comments: