
சொல்லாமல் அடக்கி
வைத்த சொற்கள் எல்லாம்
தொண்டைக் குழியில் புதைந்து பாராமாகி
நெஞ்சை அழுத்துகிறது...
சேர்த்து வைத்த வார்த்தைகள்
செல்லாத காசாய் துரு பிடித்து
இதயத்தை அறுக்கிறது...
நான் விட்டுச் சென்றால்
நீ என்ன செய்வாய்??..
விளையாட்டாய் நீ கேட்ட அன்றே
நான் சொல்லியிருக்க வேண்டுமோ?!..
சத்தியமாய் வாழ்வேன் உயிரற்று என...
No comments:
Post a Comment