Saturday, June 23, 2012

இருந்தும்...
















எந்தக் கடவுளை வேண்டி
உனைத் திரும்பப் பெறுவேன்
எதை விட நேர்ந்து கொண்டு
உனை மறுபடி அடைவேன்..

கடவுளுக்கும் காதலுக்கும்
அப்பாற் பட்டு இருக்கிறாய்
உறவுக்கும் உரிமைக்கும்
எட்டாமல் இருக்கிறாய்...

பிரிவையும் பிரியங்களையும்
நூல் நுணியில்
ஊசலாட வைக்கிறாய்...
தள்ளி நின்று
உயிர் கொண்ட உறவுக்கு தாளிடுகிறாய்...

நீராக மாறி என் தாகங்களைப் பருகுகிறாய்
மோகங்கள் எரித்துவிட்ட என் மௌனத்துள்
மோன யுத்தம் செய்கிறாய்...

நேர்கோடாய் இருந்த என்னை
வட்டமாக மாற்றிவிட்டு
நினைவுகளை உனை நோக்கி மட்டுமே
சுழற்றியடிக்கிறாய்...

சுழலில் எனை சுற்றவிட்டு
எட்ட நின்று நிபந்தனைகள் விதிக்கிறாய்
உன் கண் அசைவில்
என் தலை ஆடச் செய்கிறாய்...

இருந்தும்...
இனி என்ன செய்து
உனைத் திரும்பப் பெறுவேன்...

No comments: