Thursday, May 9, 2013

நீ!.. நான்!!.. ஒரு கோப்பை!!!...


தண்ணீரில் செதுக்கிய சிற்பம் போல
நெளிந்து நெளிந்து சேர்கின்றது
உன் பிம்பம்...

என் காதோரம் சுருண்டிருக்கும்
முடிக்கற்றைகளை நீளமாக்குகையில்
நீண்டும்

கண்களைச் சுருக்குகையில் சுருங்கியும்
என் உதடுகளைச் சுழிக்கையில் சுழித்தும்
என் இதழோரச் சிரிப்பில் விரிந்தும்

உலகை தேக்கி வைத்துள்ள
மதுக் கிண்ணத்தின் வழியே
ததும்பித் ததும்பி வழிகிறது...

நான் குலுங்கிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்
என் கோப்பையை ஏந்தியபடி...

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோதரி... செய்வீர்களா...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் காதோரம் சுருண்டிருக்கும்
முடிக்கற்றைகளை நீளமாக்குகையில்
நீண்டும்

கண்களைச் சுருக்குகையில் சுருங்கியும்
என் உதடுகளைச் சுழிக்கையில் சுழித்தும்
என் இதழோரச் சிரிப்பில் விரிந்தும்//

அழகான கற்பனை. பாராட்டுக்க்ள்.

SOS said...

// திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... ரசித்தேன்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோதரி... செய்வீர்களா...?//

உங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக நன்றி தனபாலன் சகோ. கண்டிப்பாக எழுதியபோதெல்லாம் பதிவிட்டு விடுகிறேன்.

SOS said...

////என் காதோரம் சுருண்டிருக்கும்
முடிக்கற்றைகளை நீளமாக்குகையில்
நீண்டும்

கண்களைச் சுருக்குகையில் சுருங்கியும்
என் உதடுகளைச் சுழிக்கையில் சுழித்தும்
என் இதழோரச் சிரிப்பில் விரிந்தும்//

அழகான கற்பனை. பாராட்டுக்க்ள்.//

ரசிப்பிற்கும் தொடரும் ஊக்கத்திற்கும் மிக நன்றி வை.கோ ஐயா.