Monday, February 16, 2015

பரிசு....

அன்றலர்ந்த மலரை நுகர்வதையும்
இந்நொடிப் பிறந்த குழவியை
ஏந்துதலையும்
முதல் துளி உள்வாங்கி
பரப்பும் மண்ணின் வாசத்தையும்
முதல் முத்த ஈரத்தையும்
ஒவ்வொரு தாளிலும்
உணர்த்திச் செல்கிறது
நீ பரிசளித்த புத்தகங்கள்....

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பரிசளித்த அந்தப் புத்தகங்களைவிட மிகவும் அருமையோ அருமை .... இந்தத்தங்களின் நன்றி அறிவிப்புக் கவிதை மடல் ! :) பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

மிக்க நன்றி வை.கோ சார்.