Monday, September 7, 2015

சொல் அடுக்கும் கவிதைக்காரி...

கண்ணீரின் தடம் எங்கும் பாசியென
நீ படிந்திருக்கிறாய்
உன் நினைவுகளில் நிரம்பித் ததும்பும்
என் மனதில் வெற்றிடமே இருப்பதில்லை
பிரிவின் ஏக்கம் இளைக்க வைக்கவில்லை
அசாதாரணமாக எடை கூடியிருக்கிறேன்
சதா உன் நினைவுகளைத் தின்று
உடைந்துவிடும் சாத்தியக் கூறுகள்
அதிகமிருக்கும் நம்பிக்கையின்
அந் நாள் நெருங்குவதை
நாட்காட்டியில் வெறிக்கிறேன்
என் பாடல்களில் இப்போதெல்லாம்
துள்ளல்கள் இருப்பதில்லை
வற்றிப் போன உன் காதலைப் போல
நீ புறக்கனித்த சொற்களை கவிதையாக்கி
வைக்கிறேன்
பிரிதொரு நாள் தேவைப் படும்
நீ குத்திக் காண்பிக்கவேணும்
நான் சொல் அடுக்கும் கவிதைக்காரி
நீ சொல்லெறியும் ஜென்மம்...

No comments: