Wednesday, September 9, 2015

பரிசு...

எப்போதுமே உனை நினைக்கும் நேரம்
துளிர்க்கும் ஈரம்
நனைக்கும்
என் இமைகளின் ஓரம்

இன்றென்னவோ
மேலிருந்து 
பள்ளம் நோக்கி 
வீழும் அருவியாய் 
கண்களிலிருந்து  இறங்கி
நெஞ்சுக் கூட்டில் ததும்பி
நாபிச் சுழி நிரப்பிய 
விழி நீரை 
வீழும் நீரை 
தடுக்க முயலவில்லை 

சிறு துளியோ பெரு மழையோ
என் கண்ணீர் என்றுமே உனை
தூற்றாது பதில் கேட்காது

எனக்கு உன் மீது 
புகார்கள் இல்லை
கோபங்கள் இல்லை 
வருத்தங்கள் இல்லை

இவை எல்லாம் எப்போதோ
எனைக் கடக்க வைத்துவிட்டாய்

நீ கொடுக்கும் பிறந்த நாள்
பரிசாக நான் இறக்கும் நாள் வரை
ஏந்திச் செல்வேன்
பொழுது போக்காக
நீ மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கும்

என் கண்ணீர் துளிகளை..

No comments: