Saturday, July 10, 2010

தெளிவு....

மழையடித்து தூசி கழுவிய
பசுமர இலைகளாய்
துளிர்த்தது மனம்
உன் நினைவுகள் களைந்த கணத்தில்
கல்லெறிந்த குளமாய்
ஒரு நொடி குழம்பி
மறு நொடி தெளிந்தது
இலை மேல் நீர் கழுவிய தூசியல்ல
நீர் உறிஞ்சி உயிர் கொடுக்கும்
"வேர் நீ என்று"....

No comments: