Friday, April 15, 2011

என் நொடிகள்....
















உன் விழி வீச்சு எனைத் தொட்ட நொடி
அசைவற்று நின்றன என் கடிகார முட்கள்...

உன் பார்வைகள் எனைக் கடந்த நொடி
காற்று தொட்ட நீர் குமிழியாய்
உடைந்து போனது மனது...

எனக்காக நீ உதிர்த்த மணித்துளிகளில்
பூமிப் பந்தை சுழற்றி அடித்தது யார்?...

நீ உதிர்ந்த என் வெறுமைப் பொழுதுகளில்
ஆணியடித்து அதை நிறுத்தியதும் யார்?

என் எண்ணங்களின் கர்பம் தாங்கிய
வார்த்தை ஒன்று உனைச் சேரும் முன்னே
பிரசவித்து விடுகிறது ஒவ்வொரு முறையும்
வெட்கமாக....

நீ விதைத்தது ஒரு காதல் விதைதான்
எப்படி ஓராயிரம் விருட்சங்கள்?
என்னுள் இன்று....

2 comments:

Ahamed irshad said...

நீ உதிர்ந்த என் வெறுமைப் பொழுதுகளில்
ஆணியடித்து அதை நிறுத்தியதும் யார்?//

Good & sharp Lines :))

SOS said...

Thanks for visiting and adding your comments Mr. Ahammed Irshad.