Sunday, August 14, 2011

திருப்பிக் கொடுக்க....










நேற்று என்னுடைய
எந்த அழைப்புகளையும்
நீ எடுக்கவில்லை

எந்த குறுஞ்செய்திகளுக்கும்
உன்னிடமிருந்து
பதில் இல்லை

இரவு முழுதும்
தூக்கத்திலும் துக்கத்திலுமாக
அழுது உனைத் திட்டி

எழுதிய வரிகள் யாவும்
காலை விழிப்பில்
காணாமல் போயிருக்க

எத்தனை யோசித்தும்
அத்தனையும்
மறந்த எரிச்சலில்
கிளம்பிவிட்டேன்

அன்று நீ கொடுத்த
ஒற்றை முத்தத்தை
உனக்கே திருப்பிக் கொடுக்க....

No comments: