
வரம் வேண்டிப் பெற்ற
சாபமாகிவிட்டது நம் காதல்
யுகங்களில் சொட்டிய
நிமிடங்களைப் போல
நெல் வயலில் ரோஜாக்களாய்
உன் ஞாபகங்கள்
மணம் பரப்பினாலும்
களைகளாய்
இலையுதிர் காலத்திலும்
வெற்றுக் கிளையில் அமர்ந்து செல்லும்
பறவையின் உறவு போல
எங்கு சஞ்சரித்தாலும் நினைவுகள்
உனது கிளை தேடியே..
ஈர உடையில் ஒட்டிக்கொள்ளும்
மணல் நீ
அத்தனை விரைவில் நீங்குவதில்லை
அதனாலேயே வெயில் தவிர்க்கிறேன்
மனதாழத்தில் உனை நிரப்பியிருக்கும்
மானசரோவர் நான்
கலங்கல்கள் பல இருந்தாலும்
களங்கமற்று பிரதிபலிக்கின்றேன்
உனை மட்டும் ...
1 comment:
மிக அழகாக உள்ளது கவிதையின் சூழல்களும் கவி வரிகளும்
Post a Comment