Thursday, October 20, 2011

மௌனம் போதுமானது...










பருவங்களின் நிறமாற்றத்தில்
தோன்றிய வானவில்
உன் வரவு

இப்போதெல்லாம் என் கவிதைகள்
உன் கைதட்டலுக்கோ சிலாகிப்புக்கோ
ஏங்குவதில்லை

உன்னின் இந்த நிமிட வாசிப்புக்கும்
அடுத்த நிமிட வேலைகளுக்கும் இடையே
உனை நிறுத்தி வைக்கின்ற
ஒரு நொடி மௌனம்
போதுமானதாகி விட்டது

விரல்களின் அழுத்ததில் இமை மூடி
நீ இழுத்து விடும் ஒற்றை மூச்சுக் காற்றில்
நிரம்பி விடுகிறது என்
வார்தைகளுக்கு இடையேயான
இடைவெளிகள்

உற்ற உணர்வுகளை பதியம் போட்டு
உயிர்ப்பித்து கவிதைச் செடியாக
வளர்க்கிறேன்..

பாலைவனப் புல்லின் மேல்
விழுந்த பனித்துளியாய்
என் ஒவ்வொரு கவிதையும்
உன் பார்வைப் பட்டு
சிலிர்க்கின்றது...

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை
சுவாசிக்கிறேன் என்பது தெரியாது
என் சுவாசித்தலை விட
உனை நேசித்தலே அதிகம்....

எனக்கான காற்றை உன் சுவாசத்தில்
கண்டுகொள்கிறேன்

No comments: