Tuesday, January 3, 2012

மெய் தொலைத்த...












நிஜங்களைப் பூசி வேடமிட்ட
பொய்கள்

திரை மூடியதும் தன்
உடல் தேடி

உயரே உயரே உயரே
பறந்து அலைந்து

தன் போலவே
மெய் தொலைத்த நிஜங்களின்
வெப்பத்தில் வறண்டு

தாகம் தணிக்க தடாகம் '
விழுந்த நேரம்

எங்கிருந்தோ கரிய இறகுகளை விரித்து
வந்த பெரிய பறவை ஒன்று

தன் கூரிய செவ்வலகுகளால்
கொத்திச் சென்றது...

No comments: