
கவிதைகள் எழுத நான்
ப்ரயத்தனப் படுவதேயில்லை
உன் நினைவு வந்த உடனேயே
வரிகளும் வந்து விழுகின்றன
தானாக வழியும் கண்ணீர் போல...
உனக்கு என்மீது
எல்லையில்லாக் கருணை
என் துரதிர்ஷ்டம் அக் கருணை
கைகளற்றதாய் இருப்பது...
காயங்களைச் சுமந்திருக்கும்
என் கவிதைகளில்
நீர் பருக வருகிறது
உன் தாகம்...
சுனைகளில் சேர்த்து வைத்திருக்கிறேன்
தெளிவான தண்ணீரை
என் கண்ணீரை
ஆழத்தில் தள்ளியபடி...
No comments:
Post a Comment