
என் வரிகளுக்கிடையேயும்
வாசிப்பவன் நீ..
வாசித்ததை நிஜத்தில் சொல்லாமல்
கனவிலேயே சொல்கிறாய்..
கனவுக்குள் ஒரு மந்திரமாய்
என் வாசகம்
உன்னால் உச்ரிக்கப்பட்டு
உச்சரிக்கப்பட்டு
வைரமாய் உருவெடுக்கின்றது..
காலையில் விழித்ததும்
ஒளி மட்டுமே மிஞ்சியதாய்
அத்தனையும் மறந்து
புகை போலவே சொற்களும்
மிதந்து போய்விடுகின்றன...
வாசகம் எனதாகினும்
கனவுகள் எனதாயினும்
வாசிப்பது நீ என்பதாலோ என்னமோ
எதுவும் என் வசப் படுவதில்லை...
உன் வரவால் முயங்குவதும்
உன் சொற்களால் மயங்குவதும் மட்டுமே
என் கனவுகளின் நீட்சியாகிவிடுகிறது
எப்போதும்.....
No comments:
Post a Comment