
நீ இல்லையென்றால் என்ன
இறந்துவிடுவேன் என நினைத்தாயோ?..
ஒரு புத்தகம் போதும் எனக்கு
உன் நினைவை மறப்பதற்கு..
ஒரு பாடல் போதும் எனக்கு
உன் உறவை அழித்துவிடுவதற்கு...
ஒரு மழைத்துளி நனைதல் போதும்
உன் ஞாபகம் கரைத்துவிடுவதற்கு...
பாலையில் இருந்தாலும்
தனிமையில் இருந்தாலும்
மணல் அழுத்திக் கிடப்பேனே தவிர
உன் பெயர் எழுதிக் கிடக்க மாட்டேன்...
என் இதயத்தில் மீனைப் போல
நழுவிக் கொண்டிருக்கும் உன் நினைவுகளை
தூண்டில் போட்டு நிறுத்திவிடலாம்
என பார்த்தாயோ?!..
முட்டிக்கால் கட்டிக் கொண்டு
மேட்டு வளைவைப் பார்த்துக் கொண்டு
உனக்காக உருகி உருகி கவி படைப்பேன்
என நினைத்தாயோ?!...
ஹூம்.. ஒரு போதும் இல்லை
என்ன?...
நீ இல்லையென்றால் நான்..................
No comments:
Post a Comment