என் பழைய டைரியிலிருந்து...
1.
நான் விளக்குதான்
என்னில் திரியும் இல்லை
எண்ணெயும் இல்லை
ஆனாலும் எரிகின்றேன்
உன் நினைவால்
2.
சந்தனமாக இணைந்திருந்தோம்
நீராகப் பிரிந்தாய்
உலர்ந்துவிட்டேன் நான்
3.
தப்பித் தவறி தட்டிவிடாதே
உன் மேல் ஒட்டியிருப்பது
மண் அல்ல என் மனது...
4.
என் கண்ணாடிக் கனவில்
கல் எறிந்தவன
உனக்கு நன்றி _ உடைத்ததற்கல்ல
ஒன்றை நூறாக்கியதற்கு..
5.
தெளிந்த மனதில் கல்லை
நீ எறிந்த்துவிட்டு
என்னை குழப்பவாதி என்றுவிட்டாயே...
6.
கைவலிக்க நான் எழுதிய
கவிதைக்கு அவன்
என் கரங்களில் முத்தமிட்டான்
அட நான் பாடகியாகப்
பிறந்திருக்கக் கூடாதா?...
Thursday, February 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment