
துன்பம் எனும் துரும்பு கண்டு
துவண்டு விடாதே தோழா
அதைத் துண்டாடும் இரும்புக் கரங்கள்
உனக்கு இரண்டு உண்டு மறந்துவிடாதே...
சோர்வுகளை வியர்வைகள் போல்
துடைத்தெறிந்து துணிந்து செல்
சிங்கத்தின் முன் சிறு நரிகள் என் செய்யும்?..
ஆக்கத் தெரிந்த மனம்
அழிவைக் கண்டு அச்சம் கொள்வதில்லை
நீ ஆக்கப் பிறந்தவன் ஆளுமைத்திறன் கொண்டவன்
செம்பிழம்பு ஞாயிற்றைக் கை மறைப்பாரும் உண்டோ!.
.
உனக்குள் இருப்பது பற்றியது அழிக்கும் நெருப்பல்ல
தன் சாம்பலிலும் உயிர்ப்பு தரும் எரிமலைக் குழம்பு
மெய் என்னும் ரயில் வண்டி
வாழ்வெனும் பாதையில் செல்லும்
பொய் பயணங்களில்
இன்பமும் துன்பமும் மாறி வரும் நிலையங்கள்
ஒற்றைச் சொல் மனதில் கொள்
துணிவாய் எதையும் ஏற்றுக் கொள்
“இதுவும் கடந்து போகும்”
No comments:
Post a Comment