
ஆழ்கடல் அடைந்துவிட்ட
அலை நான்
மீண்டும் கரை மோத
விழைகிறேன்
பூவிலிருந்து பொழிந்துவிட்ட
வாசம் நான்
மீண்டும் பூ சேர
விழைகிறேன்
வானை விட்டு மண் சேர்ந்த
மழைத்துளி நான்
மீண்டும் மேகம் தொட
விழைகிறேன்
சூரியன் குடித்துவிட்ட
பனித்துளி நான்
மீண்டும் இலை
தழுவ விழைகிறேன்
கூட்டுக்குள் நிரம்பிவிட்ட
தேன் துளி நான்
மீண்டும் மலர்
நனைக்க விழைகிறேன்
தவறவிட்டு பின் தவிப்புடன்
தேட விழையும் நம்
காலங்கடந்த காதல் போல...
No comments:
Post a Comment