Monday, June 20, 2011

உள்ளம் உரசும்....















என் நாட்காட்டியில் தினங்கள் எல்லாம்
உன் பெயர் கொண்டே இருக்கிறது
மாதங்கள் எல்லாம்
உனைச் சுமந்தே கழிகிறது...

பல நேரங்களில்
தவிர்க்கமுடியாத மௌனத்தின்
நிரம்புதலாக நீயே இருக்கிறாய்....

இன்னமும் என் அலைபேசியில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
நீ சொன்ன பொய்களின்
இனிமையான மிச்சம்...

உன் நினைவுகள் புண‌ர்ந்த
என் மொழிகள் யாவும்
காதல் கர்பம் தாங்கி
கவிதைகளை பிரசவிக்கின்றன...

சற்றே நாம் விதிகளை மாற்றி
உடல் உரசும் காமம் தவிர்த்து
உள்ளம் உரசும் காதல் பழகலாம் வா...

No comments: