Thursday, June 23, 2011

நிலா இரவின்...








அலைகடலில் மிதக்கும்
வெற்றுப் படகாய்
தத்தளிக்கிறது மனம்
நீ இல்லாத நினைவுகள்
சுமந்து...

நான் புதிதாய் எழுதும்
கவிதை முழுவதும்
நிரம்பியிருக்கிறது
நம் பழைய காதல்
வாசனை...

சூரியனின் ஆதார ஒளியில்
மொட்டு விரிக்கும்
நிலாஇரவின் அல்லி போல
எனது எல்லா வரிகளுக்கும்
மறைபொருள் ஆகிவிடுகிறாய் நீ...

உடைந்த என்
கண்ணாடி வளையல்களில்
இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
உன் காதல் துளி...

பாலைவனப் பறவையாகிறேன்
என் தாகங்கள் தீர உன்
காதலைக் குடித்துக் கொண்டு....

No comments: