
அனிச்சையாகவே
உன் செயல்கள் யாவையும்
எதிர்ப்பின்றி ஏற்கின்றேன்..
உன் கொஞ்சலும் கெஞ்சலும்
வசவுகளும் வாஞ்சைகளும்
அதட்டலும் அரவணைப்பும்...
நீ பேசும் அனைத்துமே
வாத்தியத்தின் நாதம் போல்
சொற்களை உதிர்த்துவிட்ட
மயக்கும் ஒலியாக என்னைச்
சேர்கின்றன...
உயிரற்ற குரல்
சொற்களைத் தேடுவது போல
உன் முன் இருக்கையில்
பேச்சு மறந்து தவித்துப் போகிறேன்...
மனிதத் தன்மையின்
அழகையெல்லாம் சுமந்து
விரிகிறது உன் உதட்டுப் புன்னகை...
என் ஆத்மாவின் ஆனந்தம் நீ
நோய்க்கு மருந்தாக வந்த நீயே
இன்று நோயாகி
என்னை வாட்டுகின்றாய்...
உன்னால் ஏற்பட்ட மனதின்
இரைச்சல் சப்தம் கூட
இப்போது என் நிசப்தத்தின்
அங்கமாகவிட்டது...
நீ இளைப்பாற அல்லவோ
பொத்தி வைத்துள்ளேன்
என் இதயத்தின் கதகதப்பை
வெறும் உடற்சூட்டில் நம் காதல்
பொசுங்குவதோ?...
No comments:
Post a Comment