
இருட்டரைக்குள் நான் இருந்தேன்
இருள் நிறந்தான் பார்த்திருந்தேன்
வெளிச்சமென நீ வந்ததாலே
விழியிழந்தும் உன் அன்பு வழி
நான் பார்த்திருந்தேன்...
பார்வையற்றும் உன் வரவாலே
பல கனவு சுமந்திருந்தேன்..
ஆண்டவன் எடுத்த கருமணியை
பெற்றது எனை ஆண்டவன்
உன் தயவாலே...
ஆசை தீர பார்க்க வந்தேன்
என் முதல் பார்வை
உன்னில் பதிக்க வந்தேன்...
பாவி பார்த்த பார்வையிலே
பூ மால போட்ட உன் படம் தான்
கண்ணில் வந்து விழுந்ததய்யா
கண்மணிகள் இப்போ வருந்துதய்யா...
No comments:
Post a Comment