
நட்பு:
எல்லாரும் சிலாகிப்பது
பாலினம்
மாறாதவரை...
இரவு:
வளர்ந்த பின்னும்
வெம்மை தரும்
மற்றுமொறு கருவறை...
மேகம்:
எரியும் சூரியனையும்
நொடிபொழுது அணைத்து
குளுமை தரும் போர்வை...
காதல்:
ஒரு நொடியாவது
நானக நீ இருந்து பார்
நீ எனக்கு யார் என்பது புரியும்
முத்தம்:
இதழில் தென்றல் முத்தம்
இதயத்தில்
புயலின் சத்தம்...
No comments:
Post a Comment