Wednesday, March 21, 2012

குறுங்கவிதைகள்...









நட்பு:
எல்லாரும் சிலாகிப்பது
பாலினம்
மாறாதவரை...

இரவு:
வளர்ந்த பின்னும்
வெம்மை தரும்
மற்றுமொறு கருவறை...

மேகம்:
எரியும் சூரியனையும்
நொடிபொழுது அணைத்து
குளுமை தரும் போர்வை...

காதல்:
ஒரு நொடியாவது
நானக நீ இருந்து பார்
நீ எனக்கு யார் என்பது புரியும்

முத்தம்:
இதழில் தென்றல் முத்தம்
இதயத்தில்
புயலின் சத்தம்...

No comments: