Sunday, April 22, 2012

தெரியாத முகவரியில்...















சில நேரங்களில் வார்த்தைகளை விட
வாக்கியங்கள் உணரவைப்பதற்கு
சுலமாகிவிடுகிறது..

என் வார்த்தைகளை ஆட்கொண்ட
வாக்கியம் நீ
உன்னை உணரவைத்தல் எனக்கு
என்னை உணர்வதைப் போல...

தெரியாத முகவரி ஒன்றில்
எனக்கானதொரு அழகிய
வீட்டைக் கட்டுகிறாய்....

உனைப் பற்றிய கனவின்
வண்ணங்களில் மூழ்கி
எண்ணங்களில் கரைகிறேன்...

காதலை ஊனமாக்கிவிட்டாய்
அதனாலேயே நான்
மாற்றுத்திறனாளி ஆகிவிட்டேன்...

நீ பரிசளித்த கைக்கடிகாரத்தின் முட்கள்
நகர்ந்து கொண்டே
காலத்தை நகர்த்திக் கொண்டே
எனை கேலி செய்கிறது...

கனவுகளில் எப்போதும்
அலை தொடாத மணற்பரப்பில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
எதைத் தொலைத்தேன் என்பது
தெரியாமலேயே...

No comments: