Saturday, July 2, 2011

வரமா? இல்லை சாபமா?....











கொடுத்தது உன்னிடமே இருக்கட்டும்
இந்த ஒரு துளிக் கண்ணீரையும் சேர்த்து
முடிந்த காதலின் முகவரியாக...

நான் எழுதிய கவிதைகளில்
இதில் தான் புள்ளி வைத்த
வார்த்தைகள் அதிகம்....

உன் உயிரை மெய்யெனச் சேர்ந்திருக்கும்
என் காதலின் புள்ளிகள் யாவும்
இன்று நம் கண்களின் நீர்த் துளிகள்...

பிரிவு உரைத்து பிரியம் உடைத்து
ஒரு செல் உயிரியாய்
உன் காதல் மட்டும் சுமந்திருந்த
என்னில் அனுவெனச் சிதறி
ஒவ்வொறு செல்லிலும்
உனை நிரப்பிச் சென்றுவிட்டாய்...

நட்பென்ற தர்மம் காக்க
காதல் சங்கடத்தைத்
தவிர்த்துவிட்டாய்...

தவிப்புகளின் விளிம்பில்
தர்மசங்கடமாய் ஒற்றை நிலவாய்
உனக்கென தவமிருந்த எனக்கு
நீ தந்தது வரமா? இல்லை சாபமா?

No comments: