
பன்னீர் தூவிய
என் மேகங்கள் யாவும்
இன்று தூவிச் செல்கிறது
கண்ணீரை..
உன் கனவுகள் கலைந்த
என் கண்களின் நீரில்
சாயம் போனது வானவில்...
விதையாய் நான்
தூவிய காதலை
நீ ஆணியால்
அறைந்து சென்றாய்...
என் உயிர் ஆடும்
ஊசலாய்...
நம் காதலைப் போல
நீ கழற்றி எறிந்த
உன் பழைய
சட்டைப் பொத்தானில்
சிக்கி இருக்கும்
என் ஒற்றை முடியில்....
No comments:
Post a Comment