
இனி என் கவிதைகள் எதுவும்
உனக்கு அர்ப்பணம் இல்லை...
உன்னால் உருவாகி
உனது உடமைகளாக
உன்னால் உணர்த்தப்பட்ட
வரிகளை எப்படி
உனக்கே சமர்ப்பிப்பேன்?!...
ஆதலினால் இனி
என் கவிதைகள்
உனக்கு அர்ப்பணம் அல்ல...
தேடிக் கொண்டிருக்கிறேன்
உனக்கென
களங்கமற்றதாய் தர
தூய அன்பு தவிர
வேறு என்ன என்னிடம்
உள்ளதென....
No comments:
Post a Comment