Monday, July 18, 2011

காதல் செய்கிறேன்...




















நமது ஒவ்வொரு சந்திப்பையும்
சுவாரசியமாக்க
என்னுடைய நாட்களின் நிகழ்வுகளை
ரசனைமிக்கதாக்குகிறேன்

நீ திரும்பும் மாலை வேளைகளில்
சாலையோரம் மலர் சொரியும்
மரக்கிளையாய்

நீ எழுதும் போது உன்
எழுத்தைப் படிக்கும்
மேஜையின் விளக்காய்

நீ அருந்தும் நேரங்களில்
உனைக் குடிக்கும் தாகமாய்

உனைக் காட்டும் கண்ணாடியில்
உனையே ஊடுருவும் பிம்பமாய்

எனை நினைக்கும் பொழுதுகளில்
உன் உதட்டில் மலரும்
ஒற்றைப் புன்னகையாய்

நீ படுக்கும் மெத்தையில்
உனைச் சுமக்கும் தலையணையாய்

உன் இமைகள் இணையும் நேரத்தில்
உனைத்தழுவும் கனவுகளாய்

உன் கொஞ்சல்களின் கூடலாய்
ஊடல்களின் கெஞ்சலாய்

நீ சுவாசிக்கையில் உள் சென்று
உன் உயிர் ஸ்பரிசிக்கும் மூச்சாய்

பிரிவறுத்து உன்னுள்ளே
கலந்துவிட்டேன்

நான் உன்னைவிட என் மேலுள்ள
உன் நேசத்தை
அதிகம் காதல் செய்கிறேன்...

No comments: