
வானம் நிலவு நட்சத்திரங்கள்
இருள் ஓளி நிறங்கள்..
சலனமற்ற இரவு
சந்தடியான பகற்பொழுது..
யாருமற்ற ஒற்றையடிப் பாதை
ஆயிரம் பேர் நடுவிலும்
உன் நினைவு மட்டும் சுமக்கும்
என் தனிமை...
அனைத்துமே எனக்கு மகிழ்வான
வஷயங்களாகிவிட்டது...
அவை அனைத்திலும்
நீ பொருந்தி
எனை ஈர்ப்பதால்...
உனக்குமாய்ச் சேர்த்து
சந்தோஷங்கள்
சுமந்து நிற்கிறேன்..
தவிர்ப்புகளால் தள்ளிப்போடாதே
அற்ப ஆயுளில் தருணங்கள்
குறைவு..
காதலில் தவிர்ப்புகளும்
தயக்கங்களும்
தண்டனைக்குரியவை......
No comments:
Post a Comment