Thursday, November 24, 2011

நீ...














தவிர்க்கவும் முடியாத
பார்க்கவும் முடியாத
மாற்றம் நீ...

விடவும் முடியாத
விழுங்கவும் முடியாத
தவிப்பு நீ...

வார்த்தைகள் சுமந்து நிற்கும்
ஆழ்ந்த மௌனம் நீ...

மௌனங்கள் பேசுகின்ற மொழி நீ...

என் இலையுதிர் காலத்தே வந்த
வசந்தம் நீ...

என் பலமான பலவீனம் நீ..
பலவீனமான பலமும் நீ...

என் முகம் மறைத்து
உன் முகம் மட்டுமே காட்டிய
மாயக் கண்ணாடி நீ...

காட்டாறாய் பெருக்கெடுத்து
சட்டென்று வற்றிவிட்ட
நதி நீ...

முடிவில் தொடங்கி
முதலிலேயே முடிந்துவிட்ட
புதிர் நீ....

No comments: