Tuesday, November 29, 2011

கழைக்கூத்தாடி....












வார்த்தைகளாய் இருந்த என் கவிதை
வண்ணத்துப் பூச்சியாய் மாறியது
உன் பார்வை தொட்ட நேரங்களில்..

மழைக்கால மாலைகளில் எல்லாம்
வந்துவிடுகிறது உன் ஞாபகங்கள்
சாரல்களாய் எனை நனைத்த
உன் காதலை நினைவுபடுத்தி..

வெயில் காயும் உச்சிப் போதுகளிலும்
வந்து அடிக்கிறது உன் நினைவலைகள்
உன் வரண்ட மௌனங்கள் சுமந்த
சுடுகாற்றாய் எனைத் தொட்டு

விரும்பினாயா?
விரும்பியது போலிருந்தாயா?
வெறுக்கிறாயா?
வெறுப்பது போலிருக்கிறாயா?

கழைக்கூத்தாடி போல்
நம் காதல் மேல் நடக்கிறேன்
கழியாக உனைப் பற்றியபடி
வீழ்வேனோ?!.. வாழ்வேனோ?!..

என் தத்தளிக்கும் கேள்விகளுக்கு
உன் ஊசிமுனை மௌனத்தில்
ஒளித்துவைத்திருக்கிறாய்
வாழ்க்கைப் புதிரின் விடையை..

No comments: