Friday, November 25, 2011

காலத்துளிகள்...













கால நதியில் கலந்துவிட்ட
மழைத்துளிகளை தேடுவது போல
தேடிக் கொண்டே இருக்கிறேன்...

என் நிகழ்காலத்தில்
தொலைந்து விட்டிருந்த
உன் இறந்தகால நினைவுகளை...

சுடும் வெயிலை விட சுட்டு விட்ட
உன் நிழலின் உக்கிரம்
அதிகமாத்தான் இருக்கிறது...

இன்னும் ரசம் பூசாத என் வீட்டின்
பழைய கண்ணாடியில்
ரசனையோடு பார்க்கிறேன்
பழகிய உன் பிம்பத்தை...

சிக்கலான பின்னல் வலையின்
நுனி முடிச்சு போல் பிடிபடாதது
என்னுள் நீ நுழைந்த நிமிடம்...

என் மூச்சுப் பயிற்சியில்
உள்ளிழுக்கும் வேகம்
வெளிவிடுவதில் இல்லை..

காற்று வெளியில் ஏதோ ஒரு துளியில்
கலந்திருக்கும் உன் “சுவாசம்”

No comments: