Tuesday, December 6, 2011

அவன் என்பது.....












அடைந்துவிட்டதென நினைத்து
அவன்
இழந்துவிட்டது அதிகம்...

பெற்றுவிட்டது என எண்ணி
அவன்
தொலைத்துவிட்டது ஏராளம்...

கடவுளும் சாத்தானும்
அவன்
சக்கரத்தின் இரு பகுதிகள்...

ஒருவரை அடைந்த நேரம்
அவன்
மற்றவர் பால் தனிச்சையாக
நகர்த்தப் படுகிறான்...

இந்த நகர்தலில் சுவடுகள்
என எதையும்
அவன்
பதித்துச் செல்லவில்லை...

அவனுக்கு
என சக்தி எதுவும் இருக்கவில்லை

அவனுக்கு
என புத்தியும் ஏதும் இருக்கவில்லை

அவன்
என்பது ஒரு பெயர்ச் சொல்லாகவே
இருக்கும் வரை

நான் என்பதில்
அவன் மூழ்காதவரை

அவன்
வெறுமையின் உச்சத்தில்
வளர்ச்சிகள் முடித்த
முழு நிலவாகிவிடுகிறான்..

No comments: