
ஒருவகையில் நீ எனது தியானம்
உறவற்று இருப்பதும்
விருப்பு வெறுப்பற்று
உனை உணர்வதும்
பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறாய்
உனை அறியாமலேயே
பயின்று கொண்டிருக்கிறேன் நானும்
நீ அறியாமலேயே..
எனை உற்றதும் நீ உதறுவதும் நீ
உண்மை எதுவென தெளிவதும் நீ
உலகத்துக்குச் பொய் சொல்வது
தவிர்க்கமுடியாதது
உனக்கு நீயே சொல்லிக் கொள்ள
முடியுமோ?!..
நான் அறிவேன் என்னுடைய
ஒவ்வொரு கவிதையையும் படிப்பதற்கு
உன் ஒரு துளிக் கண்ணீரும்
எட்டிப் பார்க்கும் என்பதை
ஊமையின் வார்த்தைகளைப் பூசி
வரும் என் பாடல்கள்
உன் கண்ணீரில் நிறமிழந்து விடுகின்றன
No comments:
Post a Comment